Pages

Posted on: Thursday, December 17, 2009

திருக்கல்யாணம்..!




திருக்கல்யாணம்..!




ஆலயங்களில்
திருக்கல்யாணம்
வருட, வருடம்
தவறாமல் நடக்கிறது...

தவறாமல்,
தாமாகவோ ...
கட்டாயத்தாலோ ...
எல்லா
முதிர் கன்னிகளும்
கலந்து கொள்கின்றனர் ...
தனக்கும் திருமணம்
நடக்க வேண்டும் என்று..!

ஆனால்,
யாரும் நினைவு கூறுவதில்லை ...
தான் கும்பிடும்
கடவுளுக்கு
திருமண சடங்கை
உருவாக்கியவன் ,
வரதட்சணை முறையை
மட்டும் அங்கு
புகுத்தாதலால் தான் ....

திருக்கல்யாணம்
வருட, வருடம்
தவறாமல் நடக்கிறது...!

Posted on: Wednesday, December 16, 2009

மூன்றாவது செவி ...!  



மூன்றாவது செவி ...!



படுக்கையில் கூட 
இரண்டாவது மனைவியாய்
அருகாமை,
தவிர்க்க முடியவில்லை...!

எப்பொழுதும் உடனிருந்து 
கட்டளையிடும் 
எஜமானனாய் ...!

குனிந்து பெருக்கும்
எதிர் வீட்டு பெண்ணின் 
கலைந்த ஆடைகளுக்கு 
இடையே,
தவிர்க்க, தவிர்க்க 
அனிச்சையாய் போகும் 
கண்களைப்போல்...
இடைஞ்சலாய் உணர்ந்தாலும் 
தவிர்க்க முடியவில்லை...!

சண்டை போடாத 
மனைவியை அடைந்தவன் போல்,
 வாழ்க்கை   சுவராஸ்யம்
இழந்து போகிறது...!

சினுங்கா அலைபேசி 
காதலி இல்லாமல் 
கடற்கரை மணலில் 
தனிமையில் காத்திருத்தல் போல்...!  

Posted on: Tuesday, December 15, 2009

நடந்து போன பாதையில்....!






நடந்து போன பாதையில்....!




ஒன்பது கிரகங்கள்,
சில கட்டங்கள்,
சிலரது பிழைப்புகள்..!

மனித கழிவை 
மனிதனே அள்ள
மாந்தர்களின் அரசியல் ...!

காவித்துணிகள்
அதில் சில
காக்கி உடைகள் ...
காக்கி உடைகள் 
அதில் சில 
கையேந்தி பிச்சைக்காரர்கள் ...!

சரிநிகர் உயிர்கள் 
பாலினத்தால்      
பலகீனப்படுத்தப்பட்டு
தன் உரிமைக்காக
33 சதவீதமாவது தா ..
என கெஞ்ச வைக்கும்
முட சமூகம்...!

சமூக விலங்குகள் 
நடந்து போன 
பாதையெங்கும் 
முகங்கள் சிதறிகிடக்கிறது ...
அத்தனையும் போலியாய் ....!

உண்மை முகம் தேடி 
தோற்று 
என் அறையுள் நுழைந்தேன் ...
அங்கே சில முகங்கள் 
சூடி எறியப்பட்டு ...! 
 
Tweet