Posted on: Thursday, December 9, 2010
சிற்றிதழ் அறிமுகம் - முதற்சங்கு
இலக்கியம் என்ற வார்த்தைக்கு பொருள் கொள்வதிலேயே எனக்கு நீண்ட தேடல்உண்டு.
பொருளாதாரத்தை ஆதாரமாககொண்ட பத்திரிக்கைகளில் முதல் படியிலேயே தோற்று சிற்றிதழ்கள் பக்கம் சென்றால் அங்கு, ஈசல்களைப்போல் பல! அதற்குள்ளும் " யார் " (?!) இலக்கியம் என்ற ஆரோக்கியமற்ற சர்ச்சைகள்!!
இறுதியாக, அல்ல! அல்ல!! நல்ல தொடக்கமாக மலர்ந்திருக்கிறது முதற்சங்கு மாத இதழ், தரமான படைப்புகளோடு!
வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவரும், நமது பதிவருமான
ஐரேனிபுரம் பால்ராசய்யா முக்கிய இடம் பிடிக்கிறார். அவரது சமூக ஆராய்ச்சி கட்டுரைகள் நம்மை மலைக்க வைக்கின்றன!
அக்டோபர் இதழில் கணியான் இனத்தை குறித்த அவரது ஆராய்ச்சி கட்டுரையை படிக்க http://idaivelikal.blogspot.com/2010/11/blog-post.html
இங்கு கிளிக் செய்யவும்.
மாதம், மாதம் எழுத்தாளர்கள் அறிமுகம் என்ற பகுதியில் வளரும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார்,ஐரேனிபுரம் பால்ராசய்யா!
இலக்கியம் நாடுவோரின் தரமான இதழான முதற்சங்கிற்கு அனைவரும் ஆதரவுதர வேண்டுகிறேன்.
முகவரி
ஆசிரியர் திரு.சிவனி சி சதீஷ்
முதற்சங்கு
த,பெஎண்25 இரணியல் சாலை
தக்கலை 629 178
கன்னியாகுமரி மாவட்டம்
கைப்பேசி 9442008269
அக்டோபர் இதழில் அடியேனைப் பற்றி … .(பெரிய தாக்க மவுசை கிளிக்கவும்)
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:26 PM
4
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
saravanakkumar,
இலக்கியம்,
சமூகம்,
நிகழ்வுகள்,
முதற்சங்கு,
விமர்சனம்
Posted on: Monday, November 1, 2010
ஓர் இந்தியனின் மன்னிப்பு கடிதம்…..!
ஓர் இந்தியனின் மன்னிப்பு கடிதம்…..!
அஹிம்சையை போதித்தவனுக்கு
நெஞ்சில் துப்பாக்கி இரவையை
பதக்கமாய் அணிவித்துவிட்டு
ஓட்டுப்போட பணம்
பெற்றுக்கொள்கிறோம் …!
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்றவனின் நினைவு நாளில்
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம் …!
செக்கிழுத்துபெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மார்க்கில் தேடுகிறோம் …!
வெள்ளையன்
அவுட் ஆப் பேஷனாய் போனதால்
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது ....!
அடிமைத்தனத்தையும்
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக்கொண்டோம்..!
எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக்கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு ..!
மகாத்மாவே …!
பாரதியே …!
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள் .......!
எங்களுக்காக நீங்கள்
சிந்தும் இரத்தத்தை கூட
என்ன குருப் என வகை பிரித்து
காசாக்கி விடுவோம் ...!
கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம் …!
உங்களிடம்
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை .....
எங்களை திருத்த
இனி நீங்கள்
தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும் .....!
வருவாயா ...? ? ?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
8:49 PM
2
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
அரசியல்,
கவிதை,
சமூகம்,
சரவணக்குமார்,
சினிமா
Posted on: Monday, October 18, 2010
கர்ப்பம் தரித்த நினைவுகள் ....!
கர்ப்பம் தரித்த நினைவுகள்....!
கோவில்வேப்ப மரத்தில்
குழந்தை கனவுடன் கட்டப்பட்ட
துணித்தொட்டில்களைப்போன்ற
உன் நினைவுகளில்
என் இதயம் தாய்மை
அடைந்து தவிக்கிறது…!
உன் மெளனமொழியில்
என் தாய் மொழி
மறந்துபோயின…!
நீ உதடு குவித்து
காற்றில்
பறக்க விட்ட முத்தங்களுடன்
வாழ்ந்து வருவதால் ….
மற்றவர்கள் சூழ்ந்திருக்க
விதவனைப்போல்
தனிமைப்பட்டு நிற்கிறேன்…!
மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
போதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகளை
என்னுள் கிளிறிவிட்டு
போய்விடுகிறது ….!
உன் காந்தப்பார்வை
நிழல் நினைவுகள்
நிஜமாகாதா என்ற ஏக்கம்
சுகமான சுமையாகவே
என்னுள்
உனனோடு ….!
நிஜமின்றி நிழல் இல்லை…!
நிழல் இன்றி நிஜமில்லை …!
கர்ப்பம் தரித்த
நினைவுகளுடன்
காலம் போகும் முன்னே
நம் பிள்ளைகளை
கொஞ்ச நீ
வருவாயா....?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
7:31 PM
3
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
காதல்,
சமூகம்,
சரவணக்குமார்
Posted on: Tuesday, October 5, 2010
தினமலர் வாரமலரும் எனது "அந்த கண நேரமும்" ...!
அந்த கண நேரம் !
தொழுநோயாளியின்
நமச்சலைப் போல்
மறுபடியும்,
மறுபடியும்...
உன் நினைவுகள்...
ஊர் உறங்கிய பிறகும்,
நீ உறங்கியிருப்பாயா
என்ற நினைப்பில் நான்!
நிலா, நிலா ஓடி வா
என்று என்
தாய் எனக்கு
அறிமுகப்படுத்திய
நிலவிற்கும்,
நீ எனக்கு அறிமுகமான பிறகு,
வரும் நிலவிற்கும்
நிறைய வேற்றுமைகளை
உணர்கிறேன்!
காரிருளை
காணும் போதெல்லாம்
விளக்கேற்ற வேண்டும்
என்ற எண்ணம் மடிந்து...
உன் செந்நிற முதுகில்
கார் கூந்தல் புரளும்
இடைவெளியில்
கடுகளவில் கிடக்கும்
அந்த
அழகிய மச்சம்...
மறக்க முயன்றாலும்
தவிர்க்க முடியவில்லை!
மவுனமாய்
பேசும் உன் விழிகள்
என் மனதை
புணர்ந்து போன
அந்த கண நேரம்...
காத்துக் கிடக்கிறேன்
போதை வஸ்து
அடிமையைப்போல்...
மற்றொரு
பார்வைக்காக!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
3:10 PM
3
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
சமூகம்,
சரவணக்குமார்,
தினமலர்,
வாரமலர்
Posted on: Thursday, August 5, 2010
தினமலர் வாரமலரில் நான் கண்ட " கலர் கனவு "
நன்றி தினமலர் வாரமலர் 01/08/2010
வானமகள்
வெட்கமில்லாமல்
மின்னலாய் பல் இளித்து
போனாள்...!
வானுயர மாளிகையை
கட்டிய தொழிலாளி
ஒதுங்க இடமின்றி
கட்டிட செல்வ செழிப்பை
பறை சாற்ற
நட்ட குரோட்டன்ஸ் வகை
மரங்களுக்கு இடையே
மரமாய் ஒட்டி
அன்னாந்து பார்த்து
தனக்குள் வியந்தான்....
இது நான் கட்டிய
கட்டிடமாக்கும் ....!
குடை பழுது நீக்குபவன்
பிறர் மழையில் நனையாமல்
இருக்க,
தன் வயிறு நனைய...
மழையில் நனைந்தபடி குடை
பழுது பார்த்துக் கொண்டிருந்தான்...!
இங்கே,
வேதாந்தம் கூட
சுகமாய் உணரப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு...?
இந்த
ஒரு வார்த்தைதான் ....
தாய் மடியாய்,
கலர் கலர் கனவுடன்
சுகமாய் தூங்க வைக்கிறது ...
விடியலில் வேதாந்தம்
பசியின் முன்
காணமல் போக,
எதுவுமே பெரிதாய்
தெரியவில்லை ...
உணவையும்...
ஆறுதல் தரும்
பொய் கனவுகளையும் தவிர....!
கலர் கனவுகள்...!
வானமகள்
வெட்கமில்லாமல்
மின்னலாய் பல் இளித்து
போனாள்...!
வானுயர மாளிகையை
கட்டிய தொழிலாளி
ஒதுங்க இடமின்றி
கட்டிட செல்வ செழிப்பை
பறை சாற்ற
நட்ட குரோட்டன்ஸ் வகை
மரங்களுக்கு இடையே
மரமாய் ஒட்டி
அன்னாந்து பார்த்து
தனக்குள் வியந்தான்....
இது நான் கட்டிய
கட்டிடமாக்கும் ....!
குடை பழுது நீக்குபவன்
பிறர் மழையில் நனையாமல்
இருக்க,
தன் வயிறு நனைய...
மழையில் நனைந்தபடி குடை
பழுது பார்த்துக் கொண்டிருந்தான்...!
இங்கே,
வேதாந்தம் கூட
சுகமாய் உணரப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு...?
இந்த
ஒரு வார்த்தைதான் ....
தாய் மடியாய்,
கலர் கலர் கனவுடன்
சுகமாய் தூங்க வைக்கிறது ...
விடியலில் வேதாந்தம்
பசியின் முன்
காணமல் போக,
எதுவுமே பெரிதாய்
தெரியவில்லை ...
உணவையும்...
ஆறுதல் தரும்
பொய் கனவுகளையும் தவிர....!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:05 PM
7
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
சரவணக்குமார்,
தினமலர்,
வாரமலர்
Posted on: Wednesday, July 14, 2010
குமுதம் வார இதழில் மாப்பிள்ளை ....
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:45 PM
11
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Posted on: Wednesday, June 30, 2010
கலர் தமிழா நீ ரெடியா...?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
5:24 PM
3
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
அரசியல்,
சரவணக்குமார்,
தமிழன்,
புரட்சிவேந்தன்,
விமர்சனம்
Posted on: Wednesday, June 9, 2010
ஒரு தட்சணாமூர்த்தி கருணாநிதியான கதை .....
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
3:33 PM
1 comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
அரசியல்,
கருணாநிதி,
கலைஞர்,
சரவணக்குமார்,
புரட்சிவேந்தன்,
விமர்சனம்
Posted on: Tuesday, June 8, 2010
கலைஞரை அரசியலுக்கு இழுத்துவந்த நீதி கட்சி ...
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
5:36 PM
1 comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
அரசியல்,
கருணாநிதி,
கலைஞர்,
சரவணக்குமார்,
தமிழன்,
புரட்சிவேந்தன்,
விமர்சனம்
குமுதம் வார இதழும் எனது எதிர் வினையும்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
4:37 PM
5
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
குமுதம்,
சமூகம்,
சரவணக்குமார்,
சிறுகதை,
விமர்சனம்
Posted on: Wednesday, May 5, 2010
தினகதிர் வாரகதிர் இதழில் எனது பிரியமான சுவாச கனவு
நன்றி தினகதிர் வாரகதிர் 28/02/2010
உன் ஒவ்வொரு
அசைவும்
பசலையாய்
என் ஒவ்வொரு அணுவையும்
தின்று கொண்டிருக்கிறது ...
கல்லூரி கடைசி நாள்...
சிறு பிள்ளைக்கு
பஞ்சு மிட்டாய்
கொடுத்து ஏமாற்றுவதுபோல்,
நீ விட்டு சென்ற
உன் பார்வை ...
இன்றும் என்
கருவிழிகளுக்கு பின்னே
கர்ப்பத்தோடு...!
நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம்
விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!
பொய்யாக இருந்தாலும்
உன்னுடன் வாழும்
அந்த நிமிடங்கள் ...
வேதனையாக இருந்தாலும்
இன்பமாக உணர்கிறேன்...
நீ காதலித்தாயா...?
நான் சுவாசித்தேன்...!
எனக்காகவே நீ
வாழ்வதாய்
இன்றும் நம்பிகொண்டிருக்கும்
என்னை
காலம் ஒரு நாள்
ஏளனம் செய்யலாம் ...
எங்கேனும்,
எப்பொழுதாவது
என் முன்னே தோன்றி
என் சுவாச கனவுகளை
கலைத்து விடாதே ...
சுகமான உன் நினைவுகளுடன்
கடைசி வரை
உறங்கிட வரம் தா ,
தேவதையே ....!
பிரியமான சுவாச கனவிற்கு....!
உன் ஒவ்வொரு
அசைவும்
பசலையாய்
என் ஒவ்வொரு அணுவையும்
தின்று கொண்டிருக்கிறது ...
கல்லூரி கடைசி நாள்...
சிறு பிள்ளைக்கு
பஞ்சு மிட்டாய்
கொடுத்து ஏமாற்றுவதுபோல்,
நீ விட்டு சென்ற
உன் பார்வை ...
இன்றும் என்
கருவிழிகளுக்கு பின்னே
கர்ப்பத்தோடு...!
நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம்
விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!
பொய்யாக இருந்தாலும்
உன்னுடன் வாழும்
அந்த நிமிடங்கள் ...
வேதனையாக இருந்தாலும்
இன்பமாக உணர்கிறேன்...
நீ காதலித்தாயா...?
நான் சுவாசித்தேன்...!
எனக்காகவே நீ
வாழ்வதாய்
இன்றும் நம்பிகொண்டிருக்கும்
என்னை
காலம் ஒரு நாள்
ஏளனம் செய்யலாம் ...
எங்கேனும்,
எப்பொழுதாவது
என் முன்னே தோன்றி
என் சுவாச கனவுகளை
கலைத்து விடாதே ...
சுகமான உன் நினைவுகளுடன்
கடைசி வரை
உறங்கிட வரம் தா ,
தேவதையே ....!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
4:33 PM
2
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
தினகதிர் வாரகதிரில் சீதைகள் தயார்...!
நன்றி தினகதிர் வாரகதிர் 14/03/2010
கத்து வட்டிக்காரனிடம்
கடன் பட்டவனைப்போல்
நிலை தடுமாறி
துடிக்கிறது இதயம்
நீ நடந்து சென்ற பாதையில்....
உன் பார்வை
தீண்டும் கணங்களில்
மின்சார தகன மேடையில்
வைக்க பட்டவனைப்போல்
செயலற்று கிடக்கிறேன்...
உன் சங்கு கழுத்தை
திருப்பி
புன்னகை பூவை
மலர விட்டு போகும்
உன் வாசம்
என்னை கட்டி இழுத்து
போகும்
உன் பின்னே ...
இதெல்லாம்
நீ விடலையாய் இரவல் வாங்கி
மயக்க நினைத்த
கவிதை வரிகள் தான்...
இதெல்லாம் வேண்டாம்
இராவணனே...!
வரதட்சணை கம்பிகளை
உடைத்து இந்த
முதிர் கன்னியை
காலமெல்லாம் காதலில்
மூழ்கடிப்பேன்
என்று ஒத்தை வரி
சொல் போதும்...
உன்னுடன் வனவாசம்
என்றாலும் உவப்புடன்
ஓடி வர இங்கே
சீதைகள் தயார்...!
சீதைகள் தயார்...!
கத்து வட்டிக்காரனிடம்
கடன் பட்டவனைப்போல்
நிலை தடுமாறி
துடிக்கிறது இதயம்
நீ நடந்து சென்ற பாதையில்....
உன் பார்வை
தீண்டும் கணங்களில்
மின்சார தகன மேடையில்
வைக்க பட்டவனைப்போல்
செயலற்று கிடக்கிறேன்...
உன் சங்கு கழுத்தை
திருப்பி
புன்னகை பூவை
மலர விட்டு போகும்
உன் வாசம்
என்னை கட்டி இழுத்து
போகும்
உன் பின்னே ...
இதெல்லாம்
நீ விடலையாய் இரவல் வாங்கி
மயக்க நினைத்த
கவிதை வரிகள் தான்...
இதெல்லாம் வேண்டாம்
இராவணனே...!
வரதட்சணை கம்பிகளை
உடைத்து இந்த
முதிர் கன்னியை
காலமெல்லாம் காதலில்
மூழ்கடிப்பேன்
என்று ஒத்தை வரி
சொல் போதும்...
உன்னுடன் வனவாசம்
என்றாலும் உவப்புடன்
ஓடி வர இங்கே
சீதைகள் தயார்...!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
3:15 PM
3
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Posted on: Thursday, April 15, 2010
பசியோடு பட்டங்கள்...!
பசியோடு பட்டங்கள்...!
கருமேகங்கள் ஓன்று கூடி
அழுது கொண்டிருந்தன...
வற்றிய மார்பில்
பச்சிளங் சிசுவை
அணைத்தபடி,
இரத்தத்தை பாலாக்க,
ஒரு துளி இரத்தத்திற்காக
சிக்னலில் ஒவ்வொரு வாகனமாக
அலைந்துக் கொண்டிருந்தாள்
அந்த பிச்சைக்காரி...!
நனையாமல் இருக்க
கோப்புகளுடன் சேர்த்து
பட்டங்களை மார்போடு
அணைத்துக்கொண்டேன் …!
அந்த பச்சிளங் குழந்தையைப்போல் ,
மார்போடு ஓட்டிக் கொண்டது
பட்டம்..!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
12:13 PM
1 comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
சமூகம்,
சரவணக்குமார்,
சினிமா
Posted on: Wednesday, April 14, 2010
இடுகாட்டில் காத்திருப்பேன்..!
இடுகாட்டில் காத்திருப்பேன்..!
என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டவளே...!
உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!
என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால் ,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிசமாய் என் அறையில்..!
சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...
தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி ..
ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொருதரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது …!
எல்லா பெண்களையும்
போல் தானே நான் ,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய் ...
பிரியமே..!
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது...?
வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்..
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக்கொள்ள ஆசைப்படுகிறேன் ...
உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர்ப்போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்... !
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
1:12 PM
4
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
சமூகம்,
சரவணக்குமார்,
சினிமா
Posted on: Tuesday, April 13, 2010
வாழ்க்கை நாடகம்...!
வாழ்க்கை நாடகம்...!
நாடகம் நடக்கிறது
இயக்குனர் யாரென்று தெரியாமலே...!
முகத்திற்கு முன்னே
பணக்கட்டுகள் ...
பிடித்திட ஓடிக்கொண்டே
இருக்கிறேன் ....
என் தோளின் மீது
ஒருவன் அமர்ந்துகொண்டு
என் முன்னே பணத்தை
கட்டி தொங்கவிட்டு
வேடிக்கை பார்க்கிறான்
என்பதை அறியாமலே...
பொருளே பிரதானமான
பொருளாதார உலகில்
உறவுகள் விலை பொருளாய்...
தகனம் கூட தனமில்லையேல்
தாழ்வாரத்தில் அழுகும், உடல்..!
சேர்த்து வைத்த
பணம் எல்லாம்
வெறும் காகிதம் என்று தெரியவரும்
முதுமையில்....
நல் உறவுகளை
இளமையில் சேர்த்து
வைக்காததால்,
பணத்தை துரத்தும்
வாழ்க்கை பயணத்தில்
தொலைத்து விட்ட உறவுகளை
முதுமையில் தேடி திரிந்து
பலனில்லை...!
மனிதா...!
வாழ பணம் தேவை!
ஆனால்,
பணத்திற்காய்
பொய் வேஷம் கட்டுவதை
கலைந்து ஏறி...!
வாழ்க்கை நாடகம்
காலமெல்லாம் இனிக்கும்!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
5:10 PM
2
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
சமூகம்,
சரவணக்குமார்
Posted on: Monday, April 5, 2010
குமுதம் வார இதழில் எனது பயணம்...
நன்றி குமுதம் 07/04/2010
சந்தோசமாய் காரில் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்ட வசந்திக்கு சரவணனின் நடவடிக்கை எரிச்சலை தந்தது.
டிரைவருடன் வழியெங்கும் சகஜமாக சிரித்து, சிரித்து பேசியபடியே வந்தவன் ஓட்டலில் தங்களுடனே உணவருந்த வைத்தான். ஹைலைட்டாக டிரைவருக்கும் சேர்த்து ஓட்டலில் ரூம்போட்டபோது பொங்கி விட்டாள் வசந்தி.
"என்னங்க இது? டிரைவரையும் சரி சமமா நம்மோட சாப்பிட வைத்துக்கொண்டு..?"
" நம்ம குடும்பத்தோட உயிரையே டிரைவர் கைல கொடுத்துவிட்டு நாம சந்தோசமா பயணிக்கிறோம். அப்போ அவரை சரி சமமா நடத்தினால் என்ன தப்பு?"
"அதில்லைங்க. டிரைவரோட பேசிக்கொண்டே வர்றீங்க..."
" நாம பேசிக்கொண்டே வந்தால் டிரைவரால தூங்க முடியாது. அதனால இரவுல நாம பாதுகாப்பா பயணம் செய்யலாம். அவங்களும் மனிதர்கள் தான். நம்மளோட இப்படிப் டிரைவரா வரும்போது, நாம குடும்பத்தோட இப்படி போக முடியலியேன்னு அவங்க மனசுல ஏக்கம் வரலாம். அதுல கவனம் சிதறினால் நமக்கு தானே ஆபத்து? என்ன சொல்ற வசந்தி"
"சரிங்க. நாளைக்கு டிரைவர் அண்ணாவோட எங்க பாகிறோம்?"
சரவணன் சிரிக்க, வசந்தி வெட்கத்தில் அவன் தோளில் ஐக்கியமானாள்.
பயணம்
சந்தோசமாய் காரில் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்ட வசந்திக்கு சரவணனின் நடவடிக்கை எரிச்சலை தந்தது.
டிரைவருடன் வழியெங்கும் சகஜமாக சிரித்து, சிரித்து பேசியபடியே வந்தவன் ஓட்டலில் தங்களுடனே உணவருந்த வைத்தான். ஹைலைட்டாக டிரைவருக்கும் சேர்த்து ஓட்டலில் ரூம்போட்டபோது பொங்கி விட்டாள் வசந்தி.
"என்னங்க இது? டிரைவரையும் சரி சமமா நம்மோட சாப்பிட வைத்துக்கொண்டு..?"
" நம்ம குடும்பத்தோட உயிரையே டிரைவர் கைல கொடுத்துவிட்டு நாம சந்தோசமா பயணிக்கிறோம். அப்போ அவரை சரி சமமா நடத்தினால் என்ன தப்பு?"
"அதில்லைங்க. டிரைவரோட பேசிக்கொண்டே வர்றீங்க..."
" நாம பேசிக்கொண்டே வந்தால் டிரைவரால தூங்க முடியாது. அதனால இரவுல நாம பாதுகாப்பா பயணம் செய்யலாம். அவங்களும் மனிதர்கள் தான். நம்மளோட இப்படிப் டிரைவரா வரும்போது, நாம குடும்பத்தோட இப்படி போக முடியலியேன்னு அவங்க மனசுல ஏக்கம் வரலாம். அதுல கவனம் சிதறினால் நமக்கு தானே ஆபத்து? என்ன சொல்ற வசந்தி"
"சரிங்க. நாளைக்கு டிரைவர் அண்ணாவோட எங்க பாகிறோம்?"
சரவணன் சிரிக்க, வசந்தி வெட்கத்தில் அவன் தோளில் ஐக்கியமானாள்.
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
4:17 PM
7
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
குமுதம்,
சமூகம்,
சரவணக்குமார்,
சிறுகதை,
விமர்சனம்
Posted on: Wednesday, March 17, 2010
குமுதம் வார இதழும் எனது பணமும்..
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:53 PM
9
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
குமுதம்,
சமூகம்,
சரவணக்குமார்,
சிறுகதை,
விமர்சனம்
Posted on: Wednesday, March 10, 2010
ஒரு வார்த்தையில்.... தினமலர் வாரமலர்
ஒரு வார்த்தையில்....
* உதட்டு சூட்டில்
அருகாமையை உணரும்
சிசுவாய்
காத்துக் கிடக்கிறேன்
உன் கொலுசொலிக்காக...
* ஆர்கானிக் விஷமாய்
உன் பார்வை என்னை
சிறுக சிறுக
அரித்துக்கொண்டிருக்கிறது!
* பசித்திடும் போது கூட,
நீ என்ன சாப்பிட்டுக் கொண்டிருப்பாய்
என்ற எண்ணமே
மேலோங்குகிறது!
* உன் வீட்டு
திரைச் சீலை
காற்றுக்கு விலகும்
போதெல்லாம்
தாயை தேடும் மழலையாய்
ஆடும் என் மனம்...
ஏமாற்றத்தில்
வெளிவந்து விழுந்த
வழித்த எச்சில் இலையை
கண்ட தெரு நாயாய்
சுருங்கி போகிறது!
* உன்னை ஸ்பரிசித்த
சுவாச காற்றை
ஸ்பரிசிக்க...
நீ நடந்து போன
பாதையில் தேடி அலைகிறேன்!
* பத்து முறை எழுதியும்
பத்தாவது கூட தேறாத
நான்...
உன் பார்வை என் இதயத்தில்
உண்டாக்கிய பூகம்பத்தால்
தலையில் இரண்டு
கொம்பு முளைத்து
சுனாமியாய் சுற்றித் திரிகிறேன்!
* இதெல்லாம்,
முக்குத் தெரு,
குட்டிச் சுவற்றில்
கும்பலாய் அமர்ந்திருந்தவர்களுக்கு
மத்தியில்...
என்னை, உன் பார்வை
குறிப்பாய்
தீண்டிப்போன கணத்தில்
இருந்தது தான்!
* என்னவளே...
என்னுள் நிகழ்ந்த
மாற்றங்கள்
உன்னுள்ளும் நிகழ்ந்தனவா?
* ஒரு வார்த்தையில்
உள்ளத்தை சொல்லிவிடு...
* இல்லை என்ற
வார்த்தை மட்டும்
நமக்கு வேண்டாமே!
நன்றி: தினமலர் வாரமலர் - 28/02/2010
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
8:30 PM
4
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
சரவணக்குமார்,
தினமலர்,
வாரமலர்
Posted on: Monday, January 4, 2010
கழற்றி எறிந்த முகங்கள்....! [ உரையாடல் போட்டிக்கவிதை]
கழற்றி எறிந்த முகங்கள்....!
பகலின் எச்சங்கள்
இரவை தின்றுக்கொண்டிருக்கின்றன.. !
வெற்றி களிப்புகள்...
குற்ற உணர்ச்சிகள் ...
காரி உமிழப்பட்ட
எச்சில் துளிகள் ஈரமாய் ...
எண் ஜானின்
ஒரு ஜான் எஜமான்
கட்டளையிடுவதால் ...
தன்மானத்தில்
பட்ட எச்சில் துளிகளை,
வழித்து எறிந்துவிட்டு
அடுத்த பொழுதை
எதிர்கொள்ள
புதிதாய்...
கூச்சல்கள்...
கதறல்கள்...
கெஞ்சல்கள்...
அதிகார சத்தங்களின் முன்
கறைந்து போகிறது...!
எளியவனும்
வலியவனாவான்
தன்னைவிட
எளியவன் சிக்க...!
உடல் வளர்க்க
சூடிய பொய் முகங்கள்
இரவில் மெய் முகத்தை
ஏளனம் பேசும்...!
இயலாமை
கண்ணீர் ஓலங்களை
புணர்ந்து பொய் முகங்களை
அறையெங்கும் பிணங்களாய்
கழற்றி போட்டிருக்கும் ...!
கண்ணீர் துளிகள் மட்டுமில்லை ...
வேதாந்தமும் சுகமாய்
உணர்த்தப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு ....?
[ உரையாடல் போட்டிக்கவிதை]
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
4:12 PM
10
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Labels:
கவிதை,
சரவணக்குமார்