Pages

Posted on: Monday, October 18, 2010

கர்ப்பம் தரித்த நினைவுகள் ....!






கர்ப்பம் தரித்த நினைவுகள்....!




கோவில்​வேப்ப மரத்தில்
குழந்தை கனவுடன் கட்டப்பட்ட
துணித்​தொட்டில்களைப்​போன்ற
உன் நினைவுகளில்
என் இதயம் தாய்மை
அடைந்து தவிக்கிறது…!

உன் ​மெளன​மொழியில்
என் தாய் மொழி
மறந்து​போயின…!

நீ உதடு குவித்து
காற்றில்
பறக்க விட்ட முத்தங்களுடன்
வாழ்ந்து வருவதால் ….
மற்றவர்கள் சூழ்ந்திருக்க
விதவனைப்​போல்
தனி​மைப்பட்டு நிற்கிறேன்…!

மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
போதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகளை
என்னுள் கிளிறிவிட்டு
போய்விடுகிறது ….!

உன் காந்தப்பார்வை
நிழல் நினைவுகள்
நிஜமாகாதா என்ற ஏக்கம்
சுகமான சுமையாகவே
என்னுள்
உனனோடு ….!

நிஜமின்றி நிழல் இல்லை…!
நிழல் இன்றி நிஜமில்லை …!

கர்ப்பம் தரித்த
நினைவுகளுடன்
காலம் ​போகும் முன்னே
நம் பிள்ளைகளை
கொஞ்ச நீ
வருவாயா....?

Posted on: Tuesday, October 5, 2010

தினமலர் வாரமலரும் எனது "அந்த கண நேரமும்" ...!





அந்த கண நேரம் !







தொழுநோயாளியின்
நமச்சலைப் போல்
மறுபடியும்,
மறுபடியும்...
உன் நினைவுகள்...

ஊர் உறங்கிய பிறகும்,
நீ உறங்கியிருப்பாயா
என்ற நினைப்பில் நான்!

நிலா, நிலா ஓடி வா
என்று என்
தாய் எனக்கு
அறிமுகப்படுத்திய
நிலவிற்கும்,
நீ எனக்கு அறிமுகமான பிறகு,
வரும் நிலவிற்கும்
நிறைய வேற்றுமைகளை
உணர்கிறேன்!

காரிருளை
காணும் போதெல்லாம்
விளக்கேற்ற வேண்டும்
என்ற எண்ணம் மடிந்து...
உன் செந்நிற முதுகில்
கார் கூந்தல் புரளும்
இடைவெளியில்
கடுகளவில் கிடக்கும்
அந்த
அழகிய மச்சம்...
மறக்க முயன்றாலும்
தவிர்க்க முடியவில்லை!

மவுனமாய்
பேசும் உன் விழிகள்
என் மனதை
புணர்ந்து போன
அந்த கண நேரம்...

காத்துக் கிடக்கிறேன்
போதை வஸ்து
அடிமையைப்போல்...

மற்றொரு
பார்வைக்காக!
 
Tweet