Pages

Posted on: Friday, January 28, 2011

நாளை என்பது ...!



நாளை என்பது ...!





நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும் நம்பிக்கை...!

இன்றைய பசியை
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது....
ஆனால்,
நம்பிக்கையூட்டும் ....!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது  ...!

நாளைய நம்பிக்கைத்தான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து ...!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன் ...!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு ...!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை ...!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ உனக்கு சுமையாக கூடாது ...!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம்  என்ற
நம்பிக்கைத்தான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரை ஈரல்
நிறைக்கிறது....!

நம்முன் தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயுரோடு இருந்து
உண்ண போகிறோம்
என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு ...!

வா ... நாளையை
ஒரு கை பார்ப்போம் ...!

உள்ளர்ப்பனத்தோடு  உழை ...!

நாளை, உன் வீட்டு
வேலைக்காரனாகும் ...!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும்
நம்பிக்கை பசை ...!

Posted on: Thursday, January 27, 2011

தினமலர் வாரமலரில் நான் வாழ்ந்த வாழ்கை

நன்றி தினமலர் வாரமலர் 23/01/2011




வா வாழ்ந்து பார்க்கலாம் …!





வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

உயிர் சுழற்சி
காமம் சம்மந்தப்பட்டது…..!

காமம் மனம் சம்மந்தப்பட்டது…..!

அடுத்தவனின் மரணம்
தரும் பயம்
வாழ்கையை ​சொல்லித்தரும் …!

பயந்த மனம் பயத்தில்
இறந்த கால நினைவுகளில்
ஆறுதல் தேடும் ..!

எதிர்கால கனவில்
ஒளிந்துக்​கொள்ள பார்க்கும் …!

நிகழ்காலம் மட்டும்
எட்டிக் காயாய் ….

தன்னை பதிவு செய்துக்​கொள்ளும்
போராட்டத்தில்
பல முகங்கள் சூடி
தான் ​தொலைந்து போன
பரிதாபம் …

வீணான மிச்சங்கள்
கூட சில உயிர்களுக்கு
உணவாகும் ……
வீணாய் முடங்கிக்கிடப்பவன்
தனக்கே சுமையாவான் ….!

முட்டி, முட்டி ஓட்டை
உடைத்துத்தான்
கோழி குஞ்சு கூட
வெளிக்காற்றை சுவாசிக்கிறது…..

உன் வாழ்கை
உன் முன்னே…

வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

கடைசி நாளில்
சிலரின் சில கண்ணீர் துளிகள்
தான்
வாழ்ந்த நாளில்
நாம் சேர்த்து ​வைத்த சொத்து ……!

வா மனிதனாய்
வாழ்ந்து பார்க்கலாம் …!
 
Tweet