Pages

Posted on: Thursday, April 14, 2011

பாக்யா வார இதழின் பார்வையாளர்கள் நேரம்

நன்றி பாக்யா 15-21/04/2011




Posted on: Monday, April 11, 2011

தினமலர் வாரமலர் வீரிய வித்தா ...?

நன்றி தினமலர் வாரமலர் 10/04/2011





வீரிய மிகு வித்து....!




ஒரு மணிநேரத்திற்கு
விலை பேசினால்
-விலைமகள் ..!

ஆயுளுக்கும் விலை பேசினால்
-கணவன்..!

பத்து நிமிடம் உடலை
சுமப்பவளுக்கு கொடுக்கும்
அங்கீகாரத்தை கூட,
பத்து மாதம்
தன் விந்தை
சுமப்பவளுக்கு கொடுப்பதில்லை
இந்த அசிங்கம் பிடித்த சமூகம்...!

பதினாறில்
பெற்றவர்களின் சொல்லில்
சிறையாகி ...

இருபதில்
மூன்றுமுடிச்சில் சுயம் தொலைத்து...

ஆறுபதில்
தன் தொப்புள்கொடியே
பாரமாய் நினைக்கையில் ....

மரமாய் ...

மரம்
பூப்பதுண்டு ....
சூடிக்கொண்டதில்லை....

மரம்
காய்ப்பதுண்டு ...
புசிப்பதில்லை....!

அதனால்,
சில மரங்கள்
முதியோர் இல்லங்களில்...

வீட்டிற்கு ஒரு மரம்
வளருங்கள்...
ஆனால்,
பெண்களை மட்டும்
மரமாய் வேண்டாம்....

அடுத்த தலைமுறையின்
வீரிய மிகு வித்து
அவள் ....!
 
Tweet