மரண சுகமடி நீ எனக்கு ....!
மாம்பழத்து வண்டைப்போல் |
தடம் காட்டாமல் |
உள் புகுந்தவளே ....! |
வண்டைப்போல் உயிர் |
குடிக்கிறாய் ... |
உயிர் குடிக்கும் அந்த |
மரண சுகம் வேண்டி |
போதை வஸ்த்து அடிமையைப்போல் |
உன்னை தேடுகிறேன் ... |
எனது ஒவ்வொரு |
கணமும் உன் நினைவுகளால் |
நிறைந்த்திருக்கிறது ... |
நீ நிறைந்திருக்கும் |
எனது கணங்கள் |
என்னை வாழ தூண்டுகின்றன ....! |
உறங்கப் போனால் |
கனவில் நீ வருவாய் |
என விழித்திருத்தலும் .... |
தெருவில் நீ வருவாய் |
என உறங்கப்போவதும் ... |
மரணத்திற்கும் |
வாழும் ஆசைக்கும் |
இடைப்பட்ட மரண சுகமடி |
நீ ...! |
காதல் ஒரு ... |
காதுகளற்ற ... |
கண்களற்ற .. |
மூளையற்ற மாற்றுத்திறனாளி ...! |
வாழ்கை என்பது |
வாழ ஊக்கமளிக்கும் |
ஊன்று கோள் ...!
ஊன்று கோளாய்
நான் உனக்கும் ...
நீ எனக்கும் ...!
இறுதிவரை
துணைபோவோமா ...?