Pages

Posted on: Friday, September 27, 2013

இப்படிக்கு, காதல் …



                                                                      இப்படிக்கு, காதல் …


விடியலில் படுக்கையை விட்டு
எழும் முன்
கடைசி ஐந்து நிமிட
தூக்கத்தைப்போல் சுகமானது
காதல் …..!

இதயம்
தாய்மை அடைந்து தவிக்கும் …!

குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ..
முழு மனிதனாய் மறு பிரசவிப்பது, காதல் …!

ஒத்த உணர்வுகள்
தனி உலகில் புணர,
விதவனைப்போல்
தனிமைப்படுத்தி வைத்திருக்கும்
இன்ப அவஸ்த்தை
காதல் …!

நான்
நீ
என்று யாரோவாக இருந்த நாம்,
நான், நீயாகவும்
நீ, நானாகவும்
வளர்சிதை மாற்றத்தால்
“நாம்” ஆக்கிவைக்கும் காதல் ….

நீயும்
நானும்
நாமாக போகும்
வளர்சிதை மாற்றத்திற்காய்
காத்திருக்கிறேன் …

காதலில் காத்திருத்தல்
மட்டுமே பல நூற்றாண்டுகலாய்
காதலை சாகாமல்
வைத்திருக்கிறது என்றாய் ….

காத்திருப்பேன் …

உன் வார்த்தையை
வாழவைக்கவேணும் ….

உனக்காக ….

                                                        - எஸ்.ஏ.சரவணக்குமார்

Posted on: Thursday, September 26, 2013

உன்னில் தொலைந்த என்னை ….


                             உன்னில் தொலைந்த என்னை ….


இரவெல்லாம் ஒட்டி உறவாடி
விடியற் நேரம்
நாணத்தோடு விட்டுப்பிரிய
மனமின்றி
ஒட்டிப்பிரியும்
புல் நுனி பனித்துளி
போல் உன் நினைவுகள் ….

கரை மோதி
காதலியை காணாமல்
ஏமாற்றத்துடன்
கரையிலேயே காத்துக்கிடக்கும்
கடற் நுரை
போல் என் உயிர்
உனக்காக காத்துக்கிடக்கிறது ….!

கொலுசொலியில் பாதை
மயங்கி
கல் தட்டி நகக்கண் பெயர ,
"அம்மா" என்று நான் அலற
"அச்சச்சோ '" என
எனக்கே எனக்காய்
நீ வீசிய பரிவுப்பார்வை ...

அன்று
உன் பார்வை
தந்த போதையில் அடிமையான
என் பாதங்கள்
உன்னை காணும் போதெல்லாம்
பாதையில் கற்க்களை தேடுகின்றன …

மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
பொழுதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகள்
என்னுள் பசலையை
கிளறிவிட்டு
போய்விடுகிறது ….!

நீ குப்பையில் வீசியவைகள்
எல்லாம் பொக்கிசமாய்
என்னுடன் ...

உன் நினைவுகளில்
என்னை நான்
புதுப்பிக்கிறேன் ....

சில சமயம்
தொலைத்துவிட்டு தேடுகிறேன் ...!

ஊர் எல்லையில்
தனியே நிற்கும்
சுமை தாங்கியைப்போல்
சுகமான உன் நினைவுகளை தாங்கி
காத்துக்கிடக்கிறேன் ....
உன்வருகைக்காக …

உன்னில் தொலைந்த
என்னை
என்னிடம் திருபித்தர
என்னிடம் நீ வருவாயா …?

                                                     - எஸ்.ஏ.சரவணக்குமார்

 
Tweet