Pages

Posted on: Friday, September 27, 2013

இப்படிக்கு, காதல் …



                                                                      இப்படிக்கு, காதல் …


விடியலில் படுக்கையை விட்டு
எழும் முன்
கடைசி ஐந்து நிமிட
தூக்கத்தைப்போல் சுகமானது
காதல் …..!

இதயம்
தாய்மை அடைந்து தவிக்கும் …!

குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ..
முழு மனிதனாய் மறு பிரசவிப்பது, காதல் …!

ஒத்த உணர்வுகள்
தனி உலகில் புணர,
விதவனைப்போல்
தனிமைப்படுத்தி வைத்திருக்கும்
இன்ப அவஸ்த்தை
காதல் …!

நான்
நீ
என்று யாரோவாக இருந்த நாம்,
நான், நீயாகவும்
நீ, நானாகவும்
வளர்சிதை மாற்றத்தால்
“நாம்” ஆக்கிவைக்கும் காதல் ….

நீயும்
நானும்
நாமாக போகும்
வளர்சிதை மாற்றத்திற்காய்
காத்திருக்கிறேன் …

காதலில் காத்திருத்தல்
மட்டுமே பல நூற்றாண்டுகலாய்
காதலை சாகாமல்
வைத்திருக்கிறது என்றாய் ….

காத்திருப்பேன் …

உன் வார்த்தையை
வாழவைக்கவேணும் ….

உனக்காக ….

                                                        - எஸ்.ஏ.சரவணக்குமார்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா... மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

Post a Comment

 
Tweet